Hot Posts

6/recent/ticker-posts

மரச்செடிகள் நடும் விழா

கோவை மாவட்டம் சூலூர் ஒன்றியம் பட்டணம் ஊராட்சியில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும்விழா நடைபெற்றது. விழாவிற்கு பட்டணம் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.கோமதி செல்வகுமார்  தலைமை வகித்தார். கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மாவட்ட ஊரக வளர்ச்சிமுகமை  சிறப்புரையாற்றி செடிகள் நட்டு விழாவினை துவங்கி வைத்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் முத்து ராஜு வரவேற்புரை வழங்கினார். விழாவில் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ஹேமலதா, உதவி பொறியாளர் அருண், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், மகளிர் சுயஉதவி விக்குழு உறுப்பினர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். விழாவில் 1000 மர செடிகள் நடப்பட்டது.