Hot Posts

6/recent/ticker-posts

அவினாசியில் அ.தி மு.க ஆர்ப்பாட்டம்

முன்னாள் முதல்வர் எம்ஜிஆரை இழிவாக பேசியதாக நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசாவை கண்டித்து திருப்பூர் மாவட்டம் அவினாசியில் அ.தி.மு.க.சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது. 

அ.தி.மு.க.பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், பேசிய எடப்பாடி பழனிச்சாமி , எம்ஜிஆர் முகத்தை காட்டி தான் தி.மு.க.ஆட்சிக்கு வந்தது என்பதை மறைந்து விடக் கூடாது.காற்றில் கூட ஊழல் செய்த ஆ.ராசா எம்ஜிஆர் பற்றி பேச தகுதியில்லை என்று கடுமையாக சாடினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளான அ.தி.மு.க. தொண்டர்கள் கலந்து கொண்டனர்.