Hot Posts

6/recent/ticker-posts

எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா பிறந்தநாள் விழா

கோவை மாவட்டம் குறிச்சி 85வது வார்டு அண்ணா திராவிட முன்னேற்றக்  கழகத்தின் சார்பில்  முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா  பிறந்தநாளை முன்னிட்டு கழக கொடியேற்றி 501 பேருக்கு தாம்பூலதட்டு, அன்னதானம், இனிப்பு வழங்கும் விழாவில் நமது கழக அமைப்பு செயலாளர் முன்னாள் வேளாண்மைத்துறை அமைச்சர்  செ. தாமோதரன் கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் கலந்து கொண்டு கழக கொடியேற்றி பொதுமக்கள் 501 

பேருக்கு தாம்பூலதட்டு, அன்னதானம், இனிப்பு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கோவை புறநகர் தெற்கு மாவட்ட விவசாய அணி செயலாளர் மகாலிங்கம், மதுக்கரை நகர செயலாளர் சண்முகராஜா, போத்தனூர் பகுதி செயலாளர் ரஃபிக், 85வது வார்டு செயலாளர் ஜெயகாந்தன், 95A வார்டு செயலாளர் ரவிச்சந்திரன், குறிச்சி ராஜநாயகம், வி.ஆர்.பி. லோகநாதன், குறிச்சி சிவா, கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.