கோவை மாவட்டம் சூலூர் ஒன்றியம் பட்டணம் ஊராட்சிக்கு உட்பட பட்டணம் புதூரில் சிறப்பு கால் நடை மருத்துவ முகாம் பட்டணம் ஊராட்சி தலைவர் கோமதி செல்வகுமார் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணை தலைவர் மோகன்ராஜ் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கருப்பு சாமி கீதாஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த மருத்துவ முகாமை காலநடை பராமரிப்பு உதவி இயக்குநர், மருத்துவர் சி.இளங்கோ துவங்கி வைத்தார். மேலும் மருத்துவர்கள் மால தேவி பிரேம்குமார் உட்பட காலநடை ஆய்வாளர் கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இந்த முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட பசுக்களுக்கும் இருநூறுக்கும் மேற்பட்ட வெள்ளாடுக்கும் அறுநூறுக்கும் மேற்பட்ட கோழிகளுக்கும் தடுப்பூசி போடப்பட்டது.
இதில் கலந்து கொண்ட கால்நடைகளில் சிறந்தவைகளுக்கு பரிசுகள் வழங்கப் பட்டது. இந்த முகாமில் சிறப்பு விருந்தினராக கோவை வடக்கு மாவட்ட இலக்கிய அணி தலைவர் செல்வகுமார் கலந்து கொண்டார்.