மனிதர்களிடையே மத பிரிவினை கூடாது என்ற அடிப்படை கருத்தில் உருவாக்கப்பட்டது பல் சமய நல்லுறவு இயக்கம். இந்த இயக்கத்தின் சார்பில் ஆண்டு தோறும் சமத்துவ பொங்கல் மற்றும் நல திட்ட உதவிகள் வழங்குதல் என கடந்த பதினைந்து ஆண்டுகளாக நடத்தி வருகின்றனர்.
இந்த நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளில் சாதனை செய்த ஆளுமைகளை தேர்ந்தெடுத்து விருதுகளை வழங்குகின்றனர். இந்த ஆண்டு இந்த விழா 12.1.2024- ந் தேதி கோவை பேரூர் தவத்திரு சாந்தலிங்க கல்லூரியில் நடைபெற உள்ளது.