கோவை சின்னியம்பாளையம், பைபாஸ் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீ சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் மாபெரும் வேளாண் திருவிழா இன்று நடைபெறுகிறது.
இதன் ஒரு பகுதியாக 200- க்கும் மேற்பட்ட ககேயம் கால்நடைகள் கொண்ட, காங்கயம் கால்நடை அழகு போட்டிகள் நடை பெறுகின்றது. நமது பாரம்பரிய வகை மாட்டினங்களில் உலகப்புகழ் பெற்ற இரகங்களில் ஒன்று காங்கேயம் மாட்டினம்.
அத்தகைய வீரத்துடன் சீறும் காங்கேயம் காளைகளை காண ஓர் வாய்ப்பாய் ஸ்ரீ சக்தி கல்லூரியில் நடக்க இருக்கின்றது. தென் இந்தியாவின் அடையாள சின்னமாக திகழும் நம் பாரம்பரியத்தின் ஓர் அங்கமான காங்கேயம் காளைகளுக்கான பிரம்மாண்ட கண்காட்சியும் நடைபெற உள்ளது.