Hot Posts

6/recent/ticker-posts

விஜயகாந்த் இறப்பிற்கு, சமூக ஆர்வலரும், சிவசக்தி சமூக சேவை நிறுவருமான சிவசக்தி தங்கராஜ் இரங்கல்

 மனித நேயம் வள்ளல் குணம் நிறைந்த திரைபட நடிகரும் அரசியல் தலைவருமான விஜயகாந்த் இறப்பிற்கு, சமூக ஆர்வலரும், சிவசக்தி சமூக சேவை நிறுவருமான சிவசக்தி தங்கராஜ் இரங்கல் செய்தி வெளியிட்டார்.

அதில் கூறியிருப்பதாவது...


கேப்டன் என்று தொண்டர்களால் அன்போடு அழைக்கப்பட்ட புரட்சி கலைஞர் விஜயகாந்த். மக்களின் மிகுந்த அன்பை பெற்று ஆளுமை மிக்க தலைவராய் வலம் வந்தவர். யதார்த்த பேச்சாலும் செயலாலும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருப்பவர்.இவருடைய கருணை உள்ளம் பல பேருக்கு தக்க சமயத்தில் காலத்தால் செய்த பேருதவியாக இருந்திருக்கின்றது. அப்பேர் பட்ட மா மனிதரின் இறப்பு தமிழ் திரைபட உலகிற்கும் தமிழக அரசியலுக்கும் கட்சி தொண்டர்களுக்கும் பொது மக்களுக்கும் பேரிழப்பு. அவரை இழந்து வாடும் அன்னாரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.