கோவை மாவட்டம் சூலூர் ஒன்றியம் காடம்பாடி ஊராட்சி சார்பில்,தலைவர் இந்திராணி தங்கராஜ் நெல்லை தூத்துக்குடி மாவட்டத்தில் வரலாறுகாணாத கணமழையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியை சூலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துராஜிடம் வழங்கினார். அருகில் சமூக ஆர்வலர் தங்கராஜ் உள்ளார்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் துணை தலைவர் அசோக்குமார், கவுன்சிலர் மல்லிகா கந்தசாமி, திருப்பதி சாமி,செம்மலர் நடராஜ்,கவிதா, கனகராஜ், செந்தில் குமார் மற்றும் ஊராட்சி செயலாளர் சண்முக வேல் மேலும் தங்கவேல் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிவாரண பொருட்களின் மதிப்பு ரூ 1லட்சத்து 50ஆயிரம் என்பது குறிப்பிடத்தக்கது.